“ஆதிக்கம் செலுத்துகிற மொழி, குயிலாகக் கூவி வந்தாலும் – மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.”
quote30
“பல்வேறு தேசிய இனங்களையும் மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்ட ஒரு நாட்டின் ஒருமைப்பாடு, இவை அனைத்தையும் சமமாக மதிப்பதில்தான் இருக்கிறது.”
quote29
“சாதிப்பற்றும், சமயத்துக்குத் தக்க கொள்கைப் பற்றும் கொண்டோரிடம் இலட்சிய உறுதியை எங்கனம் எதிர்பார்க்க முடியும்?”
quote28
“இன உரிமை, மொழி உரிமை எவரிடமும் யாசித்துப் பெறுவது அல்ல. இன்னுயிரைப் பணயமாக வைத்துப் போராடிப் பெற வேண்டியவையாகும்.”
quote27
“பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள், காற்றடிக்கும் பக்கமெல்லாம் திரும்புகின்ற காற்றாடியைப்போல் ஆகிவிடக்கூடாது.”
quote26
“ஆத்திரம், அறிவை மறைப்பது மட்டுமல்ல, அழிவையும் விரைவுபடுத்தும்.”
quote25
“இளைய தலைமுறையே, எழுவாய். செயப்படு பொருள் பயனிலையேல் விழுவாய். அறிவில் மூத்தோரைத் தொழுவாய். அரிய பயன் காண ஆழ உழுவாய்.”
quote24
“கொள்கைக்காக வாழ்பவர்கள், அந்தக் கொள்கை காத்திடும் போரில் சில களங்களை இழக்க நேரிடலாம். அதற்காகப் போரிலிருந்தே புறமுதுகிட்டு ஓடிவிடமாட்டார்கள்.”
quote23
“மனிதனை பண்படுத்தப் பயன்படாதவரையில், மதம் என்பது யானைக்கு வரும் ஒரு நோயைக் குறிப்பிடுவதாகும்.”
quote22
“கடைசி நம்பிக்கையாக இருக்கின்ற நீதியும் கைவிட்டு விடும்போதுதான், சமுதாயம் புரட்சியின் மீது நம்பிக்கை வைக்கிறது.”
quote21